praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, December 24, 2009

விண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..!












மண்ணவரை விண்ணவராக்க மன்னவர் வந்தார்
கண்ணவரென சொன்னவர் அவர் என்னவர் ஆனார்


கண்மணி விண்மணி பொன்மணி இத்தரை வந்தார்
நித்திரை ஆழ்ந்தவர் திரைவிலக்கி முத்திரை யானார்


கொண்டாடி கூத்தாடி போட்டுடைத்தோரை திண்டாடி
மன்றாடி பூட்டுடைத்தாரடி கொண்டாடி ஞானப்பெண்ணே


கொற்றவரும் மற்றவரும் திகைத்திட
கற்றவரும் சிற்றாரும் மலைத்திட
மாபெரும் ஞாயிறு உதித்ததன்றோ


ஏழைக்கு பெலனாம் எளியவரின் திடனாம்
புயலுக்கு புகலிடமாம் குளிருக்கு மறைவிடமாம்
வெயிலுக்கு குளிர்நிழலாம் கவிதையில் என்ன சொல்ல‌



Please follow me...

No comments:

Post a Comment