praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Friday, December 18, 2009

புதுவருட "வாக்குத்தத்தங்கள்" எச்சரிக்கை..!

உலக வழக்கில் சொல்கிறேன், இறைவனைப் பழிப்பவன் வாயில் "மண்ணைப் போடு" என்றானாம், ஒரு பக்தன்;அவனை விட தீவிர பக்தன் சொன்னானாம், "அந்த மண்ணும் பக்தர்களின் பதம் பட்டு புனிதமாக இருக்கும்; அதை அவன் வாயில் போடுவதால் புனிதமடைந்து அந்த பாவி கடைத்தேறிவிடுவான், அவன் நாக்கு புழுத்து போவதாக" என்று சபித்தானாம்;

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கெட்டவர்களுண்டு; அதனைக் கேட்டு விசுவாசித்தோர் கெட்டதாக வரலாறு இல்லை; புதிய விசுவாசிகளுக்கும் வளரும் விசுவாசிகளுக்கும் ஒரு கருப்பொருளுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வருட ஆரம்பத்தில் தருவதில் என்ன தவறு?

ஞானமான போதகர்கள் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களிலிருந்து தீர்க்கதரிசன செய்தியை தியானித்துப் போதித்து தங்கள் சபையினை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவர்;

மேலும் தன்னிடம் வரும் விசுவாசிக்கு கர்த்தருடைய பீடத்திலிருக்கும் ஊழியன் அவர் சார்பான வாக்கையும் எச்சரிப்பையும் தருவது அவனது கடமையாகும்; கற்பனையான சொந்த வாக்குகளைச் சொல்வதைவிட‌ ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குகளை நினைப்பூட்டுதலாகச் சொல்வது நன்மையே பயக்கும் என்பது எனது கருத்து.


To Be Contd...


No comments:

Post a Comment