praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Sunday, May 30, 2010

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;

இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷக‌னின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;

ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;

எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;

இதுபோலவே இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும் அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான‌ தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;
சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?

அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.


=>(தொடர்ந்து வாசிக்க...)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36025391

Thursday, May 27, 2010

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது..! 


சர்வ வல்லவர் மிக எளிதான முறையில் தம்முடைய வல்லமையினை வெளிப்படுத்தி கீழ்ப்படியாத இந்த மனுக்குலத்துடன் யுத்தம் செய்யமுடியும்;

அதாவது இதுபோன்றதொரு இராஜகோபுரம் கட்ட எத்தனையோ பொருட்செலவும் மனித சக்தியும் காலமும் தேவைப்படலாம்;அதனை அகற்றவும் அப்படியே..!

ஆனால் சிருஷ்டி கர்த்தரோ தனது சாதாரணமாகத் தோன்றும் மின்னலை வரவிட்டு இதைவிட பயங்கரங்களை நிகழ்த்தமுடியும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்...



(contd@யௌவன ஜனம்..!)

Saturday, May 15, 2010

புதிய அலைக் கிறிஸ்தவம் (New Age Movement) - Yauwana Janam

புதிய அலைக் கிறிஸ்தவம் (New Age Movement) - Yauwana Janam