praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, December 16, 2009

எனது டைரிக் குறிப்பு:-

எனது டைரிக் குறிப்பு:  


இன்று காலை துர்காவை சந்தித்தேன்; அவள் கடந்த சில மாதத்துக்கு முன்பு தனக்காக‌ பிரார்த்தனைக்காக செய்ய என்னைத் தொடர்பு கொண்டாள்;அது ஒரு சுவாரசியமான நிகழ்வு;அதனைக் குறித்து நிறைய எழுதவேண்டும்; இன்று அவள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நான் உள்ளூற தடுமாறினாலும் தடம் மாறாமல் அளித்த பதில் திருப்திகரமாக இருந்தது;  


அவள் கேட்ட கேள்வி,ஏன் கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள்?  


இது வழக்கமாக அனைத்து மார்க்கத்தவரும் கேட்கும் கேள்விதான்;அவர்கள் மார்க்கத்தில் எத்தனையோ பிரிவுகளிருப்பினும் கிறிஸ்தவ மார்க்கம் (மட்டுவாவது..?) பிரிவுகள் இல்லாததாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்;  


முதலில் பொதுவானதொரு பதிலைச் சொன்னேன்; இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்;இதில் எது சரி என்று எளிதாகச் சொல்லமுடியாது;ஏனெனில் ஒவ்வொன்றும் நம்பிக்கை சார்ந்த காரியம்;  


ஆனாலும் வேதம் இதற்கு தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது;வேதம் கடவுளின் தன்மையையும் அவரை அடையும் வகையையும் சொல்லித் தருகிறது;வேதம் என்பது பயின்று நிறைவேற்ற வேண்டியதாகும்; ஆனால் கடவுள் என்றதுமே தொழுகையே முதலிடம் பிடிக்கிறது;காரணம் வாழ்க்கையின் தேவைகள்;தொழுகை அவசியமானாலும் அதுவே போதுமானதல்ல;  


இதைக் குறித்த தெளிவு இல்லாததால் மனிதன் இரண்டு தவறு செய்தான்; ஒன்று, கடவுளை சிருஷ்டிகளுக்கு இணை வைத்தான்; இதனால் அவரைத் தாழ்த்தினான்; இரண்டு, எல்லாவற்றுக்கும் அதிகாரியான மனிதன் தன்னை விட தாழ்ந்த சிருஷ்டிகளை- தனக்குப் பணியாளாகக் கடவுள் சிருஷ்டித்தவற்றைப் பணிந்துக் கொண்டதால் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டான்;  


இப்படி கடவுளையும் தாழ்த்தி தன்னையும் சிறுமைப்படுத்திக் கொண்டதால் கடவுளை அடையும் வாசல் அடைபட்டது;  


இதற்குக் காரணமாக அமைந்தது,மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுயாதீனம்;இந்த சுய ஆளுமையினை தன்னாட்சியினை கடவுளுக்கு எதிர் வல்லமையிடம் இழந்ததால் அடிமைத்தனமும் பயமும் பிரிவினையும் மரணமும் வந்தது;சாவாமையுள்ள மனிதன் வாழ்வியல் அச்சங்களால் பீடிக்கப்பட்டான்;  


அடுத்த சவால் மெய்ப்பொருளை அடைய வேண்டும்; மெய்ப்பொருளான பரம்பொருளை எளிதில் அடையும் வாசல் அடைபட்டதால் மாற்றுவழியினைத் தேடும் மனிதனுக்கு முன்பாக இரண்டு கேள்வி உண்டு;  
ஒன்று கடவுளின் தன்மை என்ன? இரண்டு அவரை அடையும் வழி என்ன? அதாவது கடவுளை எப்படி புரிந்துக் கொள்ளுவது என்பதும் அவரை எப்படி அடைவது என்பதும் ஆதார நோக்கமாக இருக்கிறது;  


ஏனெனில் கடவுள் மனிதனை சிருஷ்டித்ததால் அந்த பரம்பொருளைக் குறித்த தேடலும் ஏக்கமும் ஆராய்ச்சியும் இயல்பாகவே மனிதனிடம் நிறைந்திருக்கிறது;  


ஆனாலும் எதிரியினால் திரையிடப்பட்ட‌ பிரிவினையாகிய தோஷம் நீங்காமல் பரிசுத்தமான இறைவனை அறிய முடியாது;அதற்கு ஒரு பரிகாரம் செய்தாக வேண்டும்;அந்த பரிகாரத்தை மனிதன் சார்பாக யாராவது செய்யவேண்டும்;அதனைச் செய்பவர் பாவதோஷமில்லாதவராக இருக்கவேண்டும்;  


இந்த விதிமுறையின்படி அன்புள்ள இறைவனே ஒரு ஏற்பாட்டைச் செய்தார்;தம்முடைய திரு வார்த்தையையே மனுடாவதாரத்தில் இந்த உலகுக்கு அனுப்பினார்;அவர் மூலம் பாவ மன்னிப்பாகிய மீட்பை அவருடைய மாசில்லாத இரத்தத்தின் மூலம் உண்டு பண்ண அவர் தாமே கிருபாதார பலியானார்;
 
ஆம்,ஜீவாதிபதி ஜீவனைத் தந்து நம்மை மீட்டுக்கொண்டார்; அவரே ஜீவனுக்கு அதிபதியாதலால் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார்;அவர் வழியாக பரம்பொருளை அடையும் வழி புதுப்பிக்கப்பட்டது;  


இதோ "கிறிஸ்மஸ்" எனும் பண்டிகையினைக் கொண்டாடுகிறோம்; "கிறிஸ்மஸ்" சொல்லும் சேதி என்ன,நம்மை மீட்க இறைவன் அன்புடன் அனுப்பிய கிருபாதாரபலி அவதரித்த நாள்; "அவதரித்தல்" என்னும் சொல்லே "மேலிருந்து கீழாக" என்று அர்த்தமாம்;  


ஆம்,இயேசு என்னும் இறை மைந்தன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்து நாம் விண்ணகம் சேரும் வழி வகையினை ஏற்படுத்தினார்,என்பதே நற்செய்தி..!  


துர்காவுக்கு எனது பதிலால் பரம திருப்தி;அதிலும் மனதால் இறைவனுடன் ஒன்றித்து இருப்பதே தியான அனுபவம்,அதுவே அனைத்து வெற்றிகளுக்கு ஆதாரம் என்று நான் சொன்னது மிகவும் சந்தோஷமாம்;  


ஏனெனில் தனியாக நேரமெடுத்து பிரார்த்தனை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்;ஆலயத்துக்கும் செல்லமுடியாது;வீட்டிலும் பிரார்த்தனை செய்யமுடியாது;இந்த நிலையில் நான் கூறிய எளிமையான வழிமுறை துர்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


3 comments:

Rajkumar said...

அருமையான பதிவு பிரயோஜனமாக இருந்தது தொடரட்டும் உங்கள் எழுத்தூழியம்

Anonymous said...

புதிய பதில்... புது அனுபவம்

chillsam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்,அனானி நண்பரே.!

Post a Comment