praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, November 19, 2009

இயேசு போற்றத்தக்கவரா?





மாற்கு எழுதிய நற்செய்தி நூலின் 7‍‍ ‍‍ம் அதிகாரம் 24 ம் வசனம் முதல் 29 வரையுள்ள வேத வசனப் பகுதி அநேகருக்கு ஒரு இடறலாக இருக்கிறது; மாற்று சமுதாயத்திலிருந்து உதவி வேண்டி வந்த ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணை இயேசு(வானவர்) “நாய்” என்று சொல்லி அவமானப்படுத்தி விட்டாரே, இப்படிப்பட்டவர் ‘போற்றத்தக்கவர்தானா’ என சிலர் ஐயம் எழுப்புகின்றனர்;

இயேசு(வானவர்) யூத மார்க்கத்திலிருந்து அறியப்பட்டவராக இருப்பினும் யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; யூதரைப் பொருத்தவரை அவர் அந்நியராகவே கருதப்ப‌ட்டார்; காரணம் அவர் யூதருடைய ஆச்சாரமான சமய சடங்குகளைக் கண்டித்ததாலும் யூதர்கள் வெறுக்கும் சமுதாயத்தினருடன் அவர் கலந்துற வாடியதினாலும் யூதர்கள் அவரை வெறுத்தனர்;

இந்நிலையில் இயேசு(வானவரின்)பயணத் தடங்களை ஆராய்ந்தாலும் அவர் ஒதுக்கப்பட்ட ‍தாழ்த்தப்பட்ட மக்களுடனே புழங்கி வந்தது தெரியவருகிறது; இது போன்றதொரு சூழ்நிலையில் தான் ஒரு மாற்று சமுதாயப் பெண்மணி இயேசு(வானவரின்) அருமை பெருமைகளைக் குறித்து கேள்விப்பட்டு ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள அவரிடம் வருகிறாள்;

அவளிடமும் சரி வேறு யாரிடமும் சரி இயேசு(வானவர்) தன்னை தேவன் என்றும் மகா சக்தி என்றும் சுயபெருமை பேசியதில்லை; அவரது செயல்களை உணர்ந்து மக்கள் தாமாகவே புரிந்து கொள்ளவேண்டுமென்றே அவர் விரும்பினார்;

காரணம் அவர் இந்த பூமியில் ஒரு மார்க்கத்தையோ இராஜ்யத்தையோ ஸ்தாபிக்க வரவில்லை; எனவே புகழ் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் எதையும் செய்யவில்லை; இயேசு(வானவர்) ஒரு அற்புதமும் செய்ததில்லை; அவர் தேவையுள்ளவருக்கு உதவி செய்தார்; அதற்குக் காரணமாக இருந்தது அவருடைய மனதுருக்கம்; ஆனால் அவருடைய மனதுருக்கத்தின் விளைவு சாதாரண மனிதர்களுக்கு அற்புதம் போலிருந்தது;

தாம் வந்த காரணத்தை அவரே சொல்லும் போது “இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்தார்” என்கிறார்; எனவே இயேசு(வானவர்)மனுஷனாக இந்த உலகுக்கு வந்தபோது முன்பதாக முடிவுசெய்யப்பட்ட ஒரு தெய்வீக திட்டத்தை நிறைவேற்றும் ஒரே ஒரு நோக்கத்துடன் மாத்திரமே செயல்பட்டார் என்பது விளங்கும்; அது சிருஷ்டி கர்த்தாவுடன் பிளவுபட்ட மனித உறவை சரி செய்வது மாத்திரமே; எனவே இயேசு (வானவரை)இந்த கருத்துடன் பார்த்து அவரிடம் வந்தோர் மிகச்சிலர் என்பதும் விளங்குகிறது;

இந்த குறிப்பிட்ட கிரேக்க பெண்மணியின் காரியத்திலும் கூட நாம் நிகழ்ச்சியினைக் கூர்ந்து கவனிப்போமானால் அங்கே அவர் தம்மை ஒரு யூதராக வெளிப்படுத்துகிறார்; காரணம் யூதர்களின் மார்க்க நம்பிக்கையின் படி அவர்களுடைய “யாவே” தேவனைப் பற்றிய‌ பெருமை மிகுந்த எண்ணங்களால் மற்றவர்களை “நாய்” என்று தான் சொல்லுவார்கள்; அவர்களிடம் மார்க்க வெறி இருந்த அளவுக்கு தேவ அன்பு இல்லை என்பது வேறு விஷயம்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் யூதர்களை நேசித்த அளவுக்கு அவர்கள் அவரை நேசித்து அவருக்கு உண்மையாக இருக்கவில்லை;

இந்த சூழ்நிலையில் ஒரு கிரேக்க பெண்மணி தன் மகளுக்கு சுகம் வேண்டி இயேசு(வானவரிடம்)விண்ணப்பிக்கிறாள்; அவளை இயேசு(வானவர்)ஒரு யூதனைப் போல அணுகினாலும் சுகத்தைப் பெற்றுக் கொள்ள மார்க்கமோ வர்க்க வேறுபாடுகளோ தடையில்லை என்று நிரூபிக்க விரும்பினார்; அவள் மனதிலிருந்த ‘தான் ஒரு கிரேக்க பெண்மணி’ என்ற உணர்வை அகற்ற விரும்பினார்;

கிரேக்கர்கள் பேய் பிசாசுகளை நம்புவதைவிட தங்கள் ஞானத்தையும் படைபலத்தையும் கலாச்சாரத்தையுமே பெருமையாக எண்ணினார்கள்; அந்த பாரம்பரியத்தில் வந்த ஒரு பெண்ணுக்கே இந்த பிரச்சினை வருகிறது என்றால் அதனை யார் தீர்க்கமுடியும்;

இந்த இடத்தில் அந்த கிரேக்க பெண்மணியின் செயல்பாடுகளை கவனிப்போமானால் அவள் பிரச்சினைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டாள்; அதனை மேற்கொள்ளும் வழியினைத் தேடினாள்; அதற்குத் தடையாக எதுவும் இல்லாதபடி விசுவாசத்தை மட்டுமே முன்னெடுத்துச் சென்றாள்; “வார்த்தை வெளிப்பட்டது; சுகம் கிடைத்தது; சந்தோஷம் உண்டானது”
“பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே மனுஷகுமாரன் வெளிப்பட்டார்” எனும் வார்த்தையும் இங்கே நிறைவேறியது.

எனவே இயேசு போற்றத்தக்கவரே; இந்த பூமியில் பிறக்கும் முன்னரே தீர்க்கர்களால் முன்னறிவிக்கப்பட்டார்; பிறந்ததும் தூதர்களால் போற்ற‌ப்பட்டார்; மனிதர்களுக்குள் உலாவி நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்து சிருஷ்டி கர்த்தாவாகிய பரம்பொருளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விண்ணுலகில் அமர்ந்திருக்கிறார்; காலம் நிறைவேறியதும் இந்த உலகை மாற்றியமைக்க மீண்டும் வரப்போகிறார்;


                                                                                                            “மாரநாதா..!” 

Wednesday, November 18, 2009

This is not the way of Jesus Christ

Wednesday, November 11, 2009

அற்புதம் என்பது மோசடியா..?

தமிழ்ஹிந்து தளத்துக்கு எனது பதில்...


படுபாவி
11 November 2009 at 1:32 am


டிடஸ்
// சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்; இறந்துவிட்டால், இயேசு என்பது சும்மா ஒரு கற்பனை என்று பொருள் .. இல்லையா? இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்; அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்; ஜீவனுள்ள தேவன் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார் //


நண்பர் டைடஸ் அல்ல, டிடஸ் அது என்ன கண்ராவியோ இது நிச்சயமாக கிறிஸ்தவ பெயரல்ல; உங்கள் அணுகுமுறையும் கிறிஸ்தவ அணுகுமுறையல்ல; ஏனெனில் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் வேதப் பிரமாணத்துக்கு விரோதமான சவால்களை எடுத்துவிட்டு உண்மைக்கு மாறான கொள்கைகளை அறிவிக்கமாட்டீர்கள்;


இது வடிவேல் காமெடி ட்ராக் போல இருக்கிறது; “ஏண்டா,நாந்தான் செட்டில் பண்ணி அனுப்பிட்டேனே,பிறகு ஏண்டா…” என ரௌடியிடம் அடிவாங்கிவிட்டு புலம்புவாரே அது போல சாது செல்லப்பாவுக்காக நீங்கள் எதற்கு சவால் விடவேண்டும்?


நீங்கள் நம்பாத வேதத்தைக் குறித்து ஏன் கேள்வி எழுப்பவேண்டும்?


முதலில் அதனைப் படிப்பதையும் அதைக் குறித்து பேசுவதையும் நிறுத்திவிட்டு நீங்கள் நம்பும் வேதத்தின் சிறப்பைக் குறித்து மட்டும் பேசிப் பழகுங்கள்; உங்கள் அகமும் முகமும் அழகாக மாறும்; நெருப்புடன் விளையாட வேண்டாம்; யாரோ மாற்றுக் கருத்துக்கொண்ட நண்பரைத் தாக்கப் போய் அது கடவுளுக்கு எதிரான தூஷமாகி விட்டால் மெய்யாகவே அதுபோன்ற சூழ்நிலை நமக்கு வரும் போது கடவுளிடம் உதவி கேட்க நமக்கே வெட்கமாக இருக்கும்;


கப்பல் பிரயாணத்தின் போது அவசர ஆபத்துகளுக்காக “லைஃப் ஜாக்கெட்” மற்றும் விமான பயணத்தின் போது “பாராசூட்” தரப்படுகிறது; இதன் நோக்கம் எதுவோ அதுவே இயேசு பெருமானின் வாக்குறுதியின் ஆதாரம்; உங்கள் வாதத்துக்கும் மற்ற நண்பர்களின் பரியாசமான எண்ணங்களுக்கும் பொருத்தமான பதிலாக ஒரு குறிப்பிட்ட வேத பகுதியினை கவனியுங்கள்:


Mat 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.


Mat 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.


Mat 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:


Mat 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.


Mat 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.


Mat 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:


Mat 4:9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்


Mat 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.


இது இயேசு பெருமான் இந்த பூமியில் மனுஷனாக வாழ்ந்த போது அவருக்கு நேர்ந்த அனுபவம்; அங்கே இயேசு பெருமானின் அணுகுமுறையினை தயவுசெய்து கவனியுங்கள்; அவர் சோதனைக்காரனுடைய முயற்சியினை மேற்கொண்ட விதம் மற்றும் அங்கு சொல்லப்படும் செய்தியே உங்களுக்கும் யாவருக்கும் பதிலாக இருக்கும்;


ஆம்,நாம் கடவுளை பரீட்சை பார்க்கும் வண்ணமாக எதைச் செய்தாலும் கடவுளின் உதவி நமக்குக் கிட்டாது என்பதே பால பாடமாக இருக்கட்டும்; ஆனாலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றத்தின் போதும் ஆளில்லாத சாலைகளில் நடைபெற்ற விபத்துகளின் போதும் கடவுளின் அன்பையும் அருகாமையும் ருசித்தவர்களின் அனுபவம் ஏராளமாகும்; இதில் மதமோ மார்க்கமோ வித்தியாசமே இல்லை; கடவுளைப் பொருத்தவரை நாமனைவரும் அவருடைய குழந்தைகளே..!

Monday, November 9, 2009

Promise for the month of Nov'09

Promise for the month of Nov'09

"The LORD will indeed give what is good, and our land will yield its harvest."

Psalm.85:12

Our Lord says,"...never again will my people be shamed"

Joel.2:26

Read Psalm 85:9-13
So, you’ll receive the best in this month from His...

>Grace

=unconditional
=unlimited

2. Corinthians.12:9


>Truth

=purifying
=leading

John.17:17


>Righteousness

=blood of Jesus Christ
=faith toward God

Hebrews.10:19-22


>Peace

=with God
=with all men

Ephesians.2:14-18


Grace + Truth

=Jesus Christ

John.1:17


Righteousness + Peace

=Father God and the Son

Matthew.3:16

Baptism of a old mother..obeying great commission of the Lord..!

Saturday, November 7, 2009

Wednesday, November 4, 2009

ஈரோட்டில் பிராந்தி விவசாயம்..!


வாழை மற்றும் பயிர் வகைகளின் மகசூல் பெருகவும் சுருட்டைப் புழுக்கள் ஒழிக்கப்படவும் ஈரோடு விவசாயிகள் எளிய வழியினைப் பயன்படுத்துகின்றனராம்; 
பூச்சி மருந்துகள் அதிக விலையில் விற்கப்படும் நிலையில் அதில் பிராந்தியைக் கலந்து பயிர்களுக்கு அடித்தால் சுருட்டைப் புழுக்கள் உடனடியாக ஒழிக்கப்படுவதுடன் விளைச்சலும் அமோகமாக இருக்கிறதாம்; 
நம்ம ஆட்களைப் போல விவரமாக யோசிக்க யாராலும் முடியாது; வயிற்றுல் இருந்து தொல்லை கொடுக்கற பூச்சி புழுக்களை ஒழிக்க தான "டாஸ்மாக்" சரக்கை காலி பண்றாங்க..?