praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Monday, August 30, 2010

பிரிவினையில் மேட்டிமை எதற்கு..? - Yauwana Janam

பிரிவினையில் மேட்டிமை எதற்கு..? - Yauwana Janam

தெய்வீக சுகம் பெறும் வழிகள்..! - Yauwana Janam

தெய்வீக சுகம் பெறும் வழிகள்..! - Yauwana Janam

Saturday, August 28, 2010

சுவிசேடகர்கள் ஏன் விஷம் குடிப்பதில்லை..? - Yauwana Janam

சுவிசேடகர்கள் ஏன் விஷம் குடிப்பதில்லை..? - Yauwana Janam

Sunday, August 22, 2010

பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..? - Yauwana Janam

பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..? - Yauwana Janam


"கிறித்தவன்" என்ற (போர்வையில்) பெயரில் அநேக ஜந்துகள் சுற்றிக் கொண்டிருக்கிறது; அதில் ஒரு ஜந்து சொல்லுகிறது, பரிசுத்த வேதாகமத்துக்காக வைராக்கியம் கொள்வதும் எதிர்த்து எழுதுவதும் விக்கிரகாராதனையைப் போன்றதாம்;என்ன செய்ய ஐயோ'ன்னு இருந்தாலும் இதுபோன்றோரிடமும் நமக்கு வழக்கு உள்ளது;போட்டுவைப்போம்;அந்த ஆளுடைய பொன்னெழுத்தும் என்னுடைய கிறுக்கல்களும் பின்வருமாறு:

Saturday, August 21, 2010

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்: ரமலான் ஸ்பெஷல் « gullah's Blog

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்: ரமலான் ஸ்பெஷல் « gullah's Blog

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

இது டிவி ஊழியங்களைத் தூஷித்து எழுதப்பட்டுள்ள ஒரு தளத்தின் பதிவுக்கான கட்டுரை... அது சரியா தவறா என்பதைவிட அதைக் கூறுவோரின் இலட்சணம் என்னவென்று பார்க்கவேண்டும்;அதற்கு உதாரணமாக அவர்களுடைய எழுத்துக்கள்...

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

இது டிவி ஊழியங்களைத் தூஷித்து எழுதப்பட்டுள்ள ஒரு தளத்தின் பதிவுக்கான கட்டுரை... அது சரியா தவறா என்பதைவிட அதைக் கூறுவோரின் இலட்சணம் என்னவென்று பார்க்கவேண்டும்;அதற்கு உதாரணமாக அவர்களுடைய எழுத்துக்கள்...

Friday, August 20, 2010

கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து... - Yauwana Janam

கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து... - Yauwana Janam

நான் நேரடியாக சொல்கிறேன், திரு.சுந்தர் (இறைவனாகிய சுந்தர்..?) அவர்களே உங்கள் கருத்துக்களாகிய‌ உளறல்கள் பலவற்றை நீங்கள் எனக்கு அறிவுறுத்தியபடியே நான் கண்டும் காணாமல் போயிருக்கிறேன்,

ஆனால் இது மிகவும் துணிகரமானது; போகிற போக்கில் நீங்கள் குறிப்பிட்ட "பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு.." எனும் வார்த்தையை உங்களுக்கு தைரியமிருந்தால் எனது தளத்தில் பதித்துப்பாருங்கள்; உங்களை முழுவதும் தோலுரித்துக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்; நீர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை;

உமக்கு பைபிளைக் குறித்த சரியான வரலாறு தெரியாவிட்டால் அதை முறையாகக் கற்றுக் கொண்டு வாரும்; அல்லது அதைக் குறித்துப் பேசுவதை நிறுத்தும்; மற்றபடி பைபிளை அதாவது பரிசுத்த
வேதாகமத்தைக் குறித்து அள்ளித் தெளித்த கோலம் போல கருத்துக்களை வெளியிடுவதை உடனே நிறுத்தியாக வேண்டும்...

Pls follw the link...

Monday, August 16, 2010

பரிசுத்தாவி விற்பனைக்கு..!? - Yauwana Janam

பரிசுத்தாவி விற்பனைக்கு..!? - Yauwana Janam

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

உன் கண்ணில் நீர் வழிந்தால்...
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
   

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ

என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது 
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. 
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
ٌ

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு 
கெஞ்சுபவனைப்போல... 
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் 
சின்னப்பையனைபோல... 
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... 

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
 

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி 
வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... 
என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... 

கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் 

இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... 

முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ

கண்களின் அழுகையை... 
கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் -

நீ கிணறு வெட்டுகிறாய்
 

நான் மோகத்தில் நிற்கிறேன் - 
நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து....
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... 

காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி 

எல்லா உணர்ச்சிகளையும் 
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் 

உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு 

வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு 

நீ என்ன பாலை மழையா ? இல்லை 
ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ

விரைவுத்தபாலில் 
காசோலை வரும் 
காதல் வருமா ?
 

பணத்தை தரும்... 
பாரத வங்கி ! 
பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு 

ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் 

விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ 
என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... 

நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... 

பரிதாபம் புரியாமல் 
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த 
புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... 

தொலைந்து போனது - 
என் வாழ்க்கையல்லவா..?
ٌ

விழித்துவிடு கணவா! 
விழித்து விடு - 
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... 
கிழித்துவிடு!
 

விசாரித்து விட்டு போகாதே கணவா 
விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... 

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்..!

Saturday, August 14, 2010

பீஜேவுக்கு ஒரு கேள்வி..! « gullah's Blog

பீஜேவுக்கு ஒரு கேள்வி..! « gullah's Blog

அல்லாவையும் அவன் இவன் என்று பேசுகிறார்; இவரை எதிர்ப்பவரையும் அவன் இவன் என்று பேசுகிறார்;

அப்படியானால் இவர்கள் பயபக்தியுடன் குறிப்பிடும் முகமதுதான் இவர்களுக்கு முக்கியமா ?

Chillsam's Blog எடக்கு மடக்கு..!

Chillsam's Blog

எடக்கு மடக்கு..!

தர்மம் தலைகாக்கும்;சுத்தம் சோறு போடும்;
சரி,சாம்பார் ஊத்தறது யாரு?

தாடி வெச்சவன் சோம்பேறி;
அப்ப முழுக்க மழிச்சவன்?
புத்திசாலி..!

வாசகர் தொடரட்டும்…!

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு! - Yauwana Janam

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு! - Yauwana Janam

Thursday, August 12, 2010

மைனர் பெண் திருமணம் செல்லும்:டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர்.

 
ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.

அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடு்க்கக் கோரியும் இந்தத் தம்பதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில்,

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் சிறு வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.

நாடு முழுவதும் கெளரவக் கொலைகளும் வரதட்சணைக் கொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மேஜரான பெண்ணுக்கோ ஆணுக்கோ நாம் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலேயே பலவித சிக்கல்கள் வருகின்றன. அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் எண்ணில் அடங்காதவை.

இந் நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்களையும் மேஜர் ஆகாத இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணங்களையும் நாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பது தான் சரி. பெற்றோர் செய்து வைக்கும் கட்டாய குழந்தைத் திருமணம் மட்டும் சரி, அதே நேரத்தில் இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணம் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?. இதனால் திருமண வயது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை தெளிவானதாக்குவது தான் சரியாக இருக்க முடியும். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.

இந்த சட்டம் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உடைந்த இதயங்களின் வழக்குகள், கண்ணீர் விடும் மகள், உயிருக்கு அஞ்சி ஓடும் மணமகன், மனம உடைந்து போன பெற்றோர்களின் வழக்குகள் குவிந்து வருவதை தவிர்க்கம முடியாது. காதல் ஒருவரின் வாழ்க்கையையோ அல்லது இரு குடும்பத்தினரின் வாழ்க்கையையோ கிரிமினல் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்றனர் நீதிபதிகள்.

இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..! « Chillsam's Blog

இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..! « Chillsam's Blog

கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..? - Yauwana Janam

கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..? - Yauwana Janam

அறிவோம்,கிறித்தவர்களை..! - Yauwana Janam

அறிவோம்,கிறித்தவர்களை..! - Yauwana Janam

Tuesday, August 10, 2010

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

ரமலான் நோன்பு இரகசியம்..! « gullah's Blog

ரமலான் நோன்பு இரகசியம்..! « gullah's Blog

மார்ஸ் மேடை::கவிதைகள்::Re:கைகள் இல்லை. கால்கள் இல்லை கவலைகள் ஏதும் இல்லை

மார்ஸ் மேடை::கவிதைகள்::Re:கைகள் இல்லை. கால்கள் இல்லை கவலைகள் ஏதும் இல்லை

நண்பனா...எதிரியா..? - Yauwana Janam

நண்பனா...எதிரியா..? - Yauwana Janam

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..! « Chillsam's Blog

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..! « Chillsam's Blog

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!

ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

Pls follow the link:

http://chillsam.wordpress.com/2010/08/10/blackday-for-dalit/

Monday, August 9, 2010

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

pls follow the link:


http://chillsam.wordpress.com/2010/08/09/news/

Thursday, August 5, 2010

திருச்சிக்காரன் ஓட்டம்…!

எமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…

http://thiruchchikkaaran.wordpress.com/
சுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பராமரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்?
இதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;
இதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=506728&p=2