praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, December 31, 2009

Happy New Year 2010..!

Thursday, December 24, 2009

விண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..!












மண்ணவரை விண்ணவராக்க மன்னவர் வந்தார்
கண்ணவரென சொன்னவர் அவர் என்னவர் ஆனார்


கண்மணி விண்மணி பொன்மணி இத்தரை வந்தார்
நித்திரை ஆழ்ந்தவர் திரைவிலக்கி முத்திரை யானார்


கொண்டாடி கூத்தாடி போட்டுடைத்தோரை திண்டாடி
மன்றாடி பூட்டுடைத்தாரடி கொண்டாடி ஞானப்பெண்ணே


கொற்றவரும் மற்றவரும் திகைத்திட
கற்றவரும் சிற்றாரும் மலைத்திட
மாபெரும் ஞாயிறு உதித்ததன்றோ


ஏழைக்கு பெலனாம் எளியவரின் திடனாம்
புயலுக்கு புகலிடமாம் குளிருக்கு மறைவிடமாம்
வெயிலுக்கு குளிர்நிழலாம் கவிதையில் என்ன சொல்ல‌



Please follow me...

விரும்பினது வாய்க்கும்..!






பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.


அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.


கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.


உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்கீதம்.37:1-5)


மேற்காணும் சங்கீதப் பகுதியை காமராஜபுரம் ஊழியத்தில் சற்று தியானித்தேன்; முதலில் நித்திய ஜீவனைக் குறித்த ஒரு தியானத்தினை யோசித்திருந்தேன்; ஆனாலும் இதிலிருந்து முன்னுரை போல ஒரு தத்துவத்தை சொல்லிப்போக எண்ணி துவக்கினேன்; ஆனால் இதுவே தியானமாகிப் போனது; ஆவியானவருடைய சத்தத்தையும் நடத்துதலையும் கவனித்ததன் பலனை இறுதியில் உணர்ந்தேன்;


ஆம்,அந்த வீட்டின் மூத்த மகன் குமார் வேலையில்லாத துக்கத்தில் இன்று மதியம கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தபோது பிசாசு மின்விசிரியைக் காட்டி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியிருக்கிறான்;நல்லவேளையாக அவன் கீழ்ப்படியாததால் பிசாசு இன்று தோற்றுப்போனான்;

அவனது தாயோ மகளுடைய திருமணம் தொடர்பான கடன் பிரச்சினையால் மிகவும் சோர்ந்து போயிருந்து துதிவேளையில் கைதட்ட கூட விருப்பமில்லாமலிருந்தார்களாம்;

தத்துவம்:

ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது;அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது;

ஆனால் ஆண்டவர் "இருதயத்தின் வேண்டுதல்களை" அருள் செய்வதாகக் கூறுகிறார்; "அருள் செய்வேன்" எனும் வார்த்தை இயல்பான தேவ இரக்கத்தினைக் காட்டுகிறது; தகுதியின் அடிப்படையிலல்ல; தமது அன்பின் ஆதாரத்திலிருந்து கிருபையுடன் ஆசி தரும் தேவ சிநேகம்..!

மேலும் நம்முடைய சிந்தையிலுள்ள காரியத்துக்கும் பதில் தருவதாக வாக்கு கொடுக்கிறார்; நாம் எல்லாவற்றையும் வார்த்தையினால் விளக்கிவிடமுடியாது; ஆனால் சிந்தையின் வேகம் அபாரமானது; அதனை ஒழுங்குபடுத்தினால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் ஏராளமாக இருக்கும்.

"அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம்.20:4)

"துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்." (நீதிமொழிகள்.10:24)

இந்த வார்த்தைகளும் மனதிலுள்ள விருப்பங்கள் ஆவியானவரால் கண்காணிக்கப்படுவதையே கூறுகிறது;

"என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." (சங்கீதம்.139:4)

"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான்.2:25)

ஆம்,நம்முடைய வார்த்தைகளைவிட சிந்தையே தேவனுடைய அற்புதம் விளங்கக் காரணமாக இருக்கிறது; எனவே ஏக்கத்துக்கும் விரக்திக்கும் மனச்சோர்வுக்கும் இடந்தராமல் முதல் கட்டத்திலிருந்து அதாவது விருப்ப நிலையிலேயே காத்திருப்பதுடன் "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" என்று வேதம் ஆலோசனை கூறுகிறது; ஆம்,மன மகிழ்ச்சி நல்ல ஔஷதம் என்றும் வேதம் கூறுகிறது; அதாவது அதுவே அருமருந்தாம்;

"பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்." என்றும் வேதம் கூறுகிறது; ஆம்,எரிச்சலும் பொறாமையும் நம்மையே நோயாளியாக்கிவிடுவதுடன் நம்து செயல்திறனையும் கெடுத்துப்போடும்;

நாம் என்ன நினைக்கிறோம்,நமக்கு தீங்கு செய்பவனை ஆண்டவர் உடனே அழித்துப்போடவேண்டும் அல்லது அவனே அழிந்து போகவேண்டும்'என்று; ஆனால் அவர்களுக்கென்று ஏகக் கால திட்டத்தினை கர்த்தர் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோமா?

"அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு." (சங்கீதம்.37:38)

ஆனால் நாம் செய்யக்கூடியதானதொரு காரியம் தொடர்ந்து நன்மை செய்வது;

"கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்."

இதன்படி நாம் நம்முடைய மேய்ச்சலில் கவனமாக இருக்கவேண்டும்; தேவையில்லாத களைகளையும் தளைகளையும் தவிர்த்து புல்லுள்ள இடங்களில் மேய்க்கும் நல்ல மேய்ப்பனுக்கு அடங்கியிருந்து சத்தியமானதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்; சத்தியத்துக்கு விரோதமானவற்றுடன் போராடக் கூடாது; அது நம்மை சோர்வடையவே செய்கிறது;

எல்லாவற்றுக்கும் மேலாக,"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." என்றும் வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது;

நம்முடைய அனைத்து திட்டங்களையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு அவருடைய ஒப்புதல் கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்;



இறுதியாக இந்த குறிப்பிட்ட வசனங்களிலிருந்து நாம் செய்யவேண்டிய மூன்று காரியங்களும் ஆண்டவர் நமக்காக செய்யும் இரண்டு காரியங்களுமாக நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை:



1.கர்த்தரில் நம்பிக்கை
2.கர்த்தரில் மனமகிழ்ச்சி
3.கர்த்தரில் ஒப்புவித்தல்

இவை மூன்றும் நாம் செய்யவேண்டுமாம்.


1.சிந்தைக்கும் பலன் தருவார்
2.செய்தும் தருவார்

இவையிரண்டும் கர்த்தர் நமக்காக செய்வது.



துடித்துப் போனாள்,துர்கா..!


வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;

அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; 


இதனை முடிக்கவே விடிந்துவிட்டது; படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது; எழுந்திருக்கும் போது மதியம் 1மணி; தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;




Wednesday, December 23, 2009

நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது எப்படி?

"பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
 

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
 

அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான்.
 

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
 

அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.(மாற்கு.10:17 22)

இந்த உலகில் ஆசை இல்லாதவர் யாருமில்லை;ஆசை தவறு அல்ல,பேராசையே ஆபத்தானது;

ஒரு முறை ஒரு ஊழியக் குழு கிராமத்துக்கு சுவிசேஷம் அறிவிக்கச் சென்றது; கிராம மக்களிடம் ஆண்டவருடைய அன்பையும் தாங்கள் தேடி வந்த நோக்கத்தையும் கூற, காணாமற் போன ஒரு ஆட்டைத் தேடிய மேய்ப்பனுடைய கதையைச் சொல்லிவிட்டு அந்த மேய்ப்பன் 99 ஆடுகளைவிட்டு ஒரு ஆட்டைத் தேடிச் செல்ல என்ன காரணம் என்று கேட்டாராம்,சுவிசேஷகர்; 


அவர் எதிர்பார்த்த பதில் வரவில்லை; ஒரு கிழவி எழுந்து சொன்ன பதில் அந்த குழுவை அதிர்ச்சியடையச் செய்தது; அவள் சொன்னாள்,"அந்த மேய்ப்பன் ஒரு ஆட்டைத் தேடிச் செல்ல காரணம், அவனது பேராசையே; அதான் 99 ஆடுகள் இருக்கிறதே அது போதாதா?" என்றாளாம்; ஆம்,சுவிசேஷத்தை சொல்லும் விதமாகச் சொல்லாவிட்டால் இதுபோலவே ஆகும்;

இன்று பலருடைய பொதுவான ஆசையானது நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதானே; அந்நாட்களில் ஆதாம் முதல் நோவா வரை பல நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்தனர்: ஆனாலும் தேவன் இந்த உலகின் அக்கிரமத்தினிமித்தம் அதை ஜலத்தினால் அழித்தபிறகு வந்த சந்ததியாரின் வாழ்நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; மோசே அதிகபட்சம் 120 வருடம் வாழ்ந்தார்; அவரே சொல்லும் போது 70 அல்லது 80 வருடம் என்று சொல்லும் அளவில் வந்து நிற்கிறது; இன்றும் உலகில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தோரின் வயதைப் பார்த்தால் அது 120 வய்துக்கு மிகாமலிருப்பதைக் காணலாம்;

நாம் வாசித்த வேத பகுதியில் ஆண்டவர் நித்திய ஜீவனைக் குறித்து போதிக்கிறார்; சம்பந்தப்பட்ட ஒருவன் அதிக நாட்கள் வாழ்வதைக் குறித்தல்ல, எப்போதும் வாழ்வதைக் குறித்த யோசனையை ஆண்டவரிடம் கேட்கிறான்; அதாவது அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டுமாம்; ஆண்டவரும் அன்புடனே கூறுகிறார், கற்பனைகளைக் கைக்கொள் என்று; அவனும் சளைக்காமல் அவற்றை சிறுவயது முதலே கைக்கொண்டு வருவதாகக் கூறுகிறான்; ஆனாலும் அவன் பணக்காரனாக இருந்ததால் ஆண்டவர் அடுத்து கூறிய காரியத்தைக் கேட்டு துக்கத்துடன் போய்விட்டானாம்; ஆண்டவர் சொன்னது,"உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு"

ஆண்டவர் இங்கே கைக்கொள்ளவேண்டிய கற்பனைகளாக ஆறு மட்டுமே சொல்ல ரொம்ப சந்தோஷமாக அவைகளையெல்லாம் கைக்கொண்டு வருவதாக எளிதாகச் சொல்லிவிட்டான்; ஆனால் முதலாம் கற்பனையினைச் சொல்லவில்லையே, அது என்ன ? என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்பதே; அதுதான் துக்கத்துக்குக் காரணம்; இவனுக்கு இவன் ஆஸ்தியும் சம்பாத்தியமுமே தேவர்களாக இருந்தார்கள்; அதனை ஆண்டவர் விடச் சொன்னதால் துக்கம் வந்தது;

ஆனாலும் பரலோகம் என்றால் எல்லாருக்கும் ஆசைதான்; அதைக் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லுவதுண்டு; ஆனால் அங்கே எந்த பிரிவினையும் ஏற்றத் தாழ்வும் இருக்கப்போகிறதில்லை; ஆண்டவர் சொல்லும் போது மிக எளிமையாக, "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."(யோவான்.14:3) என்றே சொல்லுகிறார்;

பரலோகத்தைக் குறித்த ஒரு கற்பனை கதையுண்டு; இரண்டு பேர் மரித்து பரலோகம் சென்றனர்; வழக்கம் போல பேதுரு அவர்களை வரவேற்று விசாரித்தார்;

ஒருவர் சொன்னார்,"நான் ஒரு ஆட்டோ டிரைவர்" உடனே பேதுரு அவனை நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு பெரிய மாளிகையில் கொண்டுவிட ஒரு தூதனுக்குக் கட்டளையிட்டார்;

அடுத்தவர் கூறினார், "நான் ஒரு பெரிய பாஸ்டர்" இப்படி கூறும் போது பாஸ்டருக்குள் 'ஆட்டோ டிரைவருக்கே அத்தனைப் பெரிய மாளிகையென்றால் தமக்கு இன்னும் பிரமாண்டமான அரண்மனையே காத்திருக்கும்' என்று கற்பனை சிறகு விரிந்தது; ஆனால் பேதுருவோ அவருக்கு ஒரு சிறிய தனி அறையை ஒதுக்க, பாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது; நியாயம் கேட்டுப் போராடினார்; பேதுரு அவரை சமாதானப்படுத்தி இப்படி விளக்கினார், "ஐயா,நீங்க நல்லா ஊழியம் செய்தீங்க, ஆனா உங்க ஜனங்க ஆண்டவரிடம் திரும்பல, நீங்க பிரசங்கம் பண்ணினா தூங்கினாங்க, சபை முடிந்து வீட்டுக்குப் போனதும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாங்க, உங்க ஊழியத்தால அவங்க வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை; ஆனா இந்த ஆட்டோ டிரைவரோ அப்படியல்ல அவன் வண்டிய ஸ்டார்ட் பண்ணவுடனே பயணி உயிர் பயத்தில் ஜெபிக்கத் துவங்கிவிடுவார் அந்த அளவுக்கு பயங்கரமா வண்டிய ஓட்டி ஜனங்க ஆண்டவரைத் தேட வைத்தானே" என்றாராம்;

இப்படி எல்லோருக்குமே நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசையும் மரணத்துக்குப் பிறகு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு; அதற்கு வேதம் சொல்லும் யோசனை என்ன என்பதை சிந்திப்போமாக;

1.வசனத்தைக் காத்துக் கொள்ளுதல்

வேதம் சொல்லுகிறது,"என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்,அப்பொழுது பிழைப்பாய்."(நீதிமொழிகள்.7:2)

"பிழைப்பாய்" எனும் வார்த்தையே நித்திய ஜீவனைக் குறிக்கும் வார்த்தை;ஆம்,வேத வசனத்தைக் கைக்கொள்ளாமல் மரணத்துக்குத் தப்பமுடியாது;ஏனெனில் இது நித்திய ஜீவனுக்கான வசனம்;

ஆண்டவருடைய போதனை கடினமானதாக இருந்தது என‌ அநேகர் போய்விட்டனர்;ஆனால் பேதுரு சொல்லும் போது,"... ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே."(யோவான்.6:68)

மேலும் "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது."(யோவான்.6:63)என்று ஆண்டவரும் சொல்லுகிறார்;

"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."(1.கொரிந்தியர்.15:19) என்று பவுலடிகளும் கூறுகிறார்;

வசனமே இளைப்பாறுதலைக் கொடுக்கிறது;"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு.11:28)

இது நம்முடைய ஆண்டவருடைய அன்பான அழைப்பு;இங்கே பாரம் என்பது எது? மனிதனை அழுத்திக் கொண்டிருக்கும் நான்கு முக்கிய பாரங்கள் உண்டு;
1.பாவ பாரம்
2.சடங்காச்சாரங்கள்
3.உபத்திரவங்கள்
4.மெய்யான தெய்வத்தை தேடுதல்

ஆனால் ஆண்டவருடைய வசனமோ இளைப்பாறுதலைத் தருவதுடன் நித்திய ஜீவனையும் தருகிறது;எனவே வேதத்தை முறையாக வாசித்துப் பழகவேண்டும்;

சென்ற நூற்றாண்டின் பிரபல போதகர் தனது வாழ்நாளில் 300 முறை வேதத்தை வாசித்து முடித்தவராம்;அதில் அவர் முழங்காலிலிருந்து வேதத்தை வாசித்தது 100 முறையாம்;

 நாமும் இதுபோன்ற நல்ல தீர்மானங்களை எடுத்து நிறைவேற்றினால் நித்திய ஜீவனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

2.அழைப்பை நிறைவேற்றுதல்

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது;நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது."(யோவான்.10:27)

இதுவே நம்முடைய ஆண்டவருடைய எதிர்பார்ப்பு;ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நம்மை அழைத்திருப்பாரானால் அந்த நோக்கம் மாறவே மாறாது;நாம் அதற்காகக் காத்திருந்து அதை நிறைவேற்ற வேண்டும்;

மேலும் அவரைப் பின்பற்றுவதினால் மாத்திரமே நித்திய ஜீவனை சுதந்தரிக்கமுடியும்;அவரைப் பின்பற்றுவது என்பது அவரை நேசிப்பதும் அவர் நடந்தபடியே தானும் நடப்பதுமாகும்;

ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்துக்கு செவிகொடுத்து நடப்பதுடன் மேய்ப்பன் நடத்திச் செல்லும் இடம் இன்னதென்று அறியாதிருந்தாலும் நம்பிக்கையுடன் பின்செல்லுகிறது;

விலகிச்செல்லும் ஆடுகளோ மந்தையிலிருந்து ஐக்கியத்தையும் போஷிப்பையும் இழக்கிறது;ஆபத்திலும் சிக்கிக் கொள்கிறது;

ஆனால் மேய்ப்பனைப் பின் தொடரும் ஆடுகளோ பாதுகாப்பாக இருக்கிறது;நாமும் கூட ஆண்டவரை இதுபோன்ற நிலையிலிருந்து பின்பற்றுவோமானால் நித்திய ஜீவனை அடைவது நிச்சயம்.

3.விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுதல்

நித்திய ஜீவனை அடைய உதவும் மற்றுமொரு குணாதிசயமாக ஆண்டவர் சொன்னது,விசுவாசமாகும்;

"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(யோவான்.5:24)

பிதாவாகிய தேவனை விசுவாசிப்பது நித்திய ஜீவனை அடைய உதவும்;அதுமாத்திரமல்ல,இயேசுவை விசுவாசிப்பதும் அவசியமாகும்;யோவான் ஸ்நானன் கூறும்போது, "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்."(யோவான்.3:36)

இன்றைய நவீன கால பாதிப்பினால் வேதாகம கல்லூரிகள் தவறானவற்றைப் போதிக்கத் துணிகிறது;அவர்கள் எப்படியாவது உலகத்துடன் ஒத்துப்போகவும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளவும் முயற்சித்து வேதத்தையே திரித்து விடுகிறார்கள்;

உதாரணமாக இயேசு கலிலேயா கடலின் மீது நடந்தார் என்பது பெரிய அற்புதமாக இருந்திருக்க வாய்ப்பில்லை; அது ஆங்காங்கே மணல் திட்டுகளுடனும் சுமார் இரண்டடி அளவே ஆழமுமாக இருக்கும்; இதனை நன்கு அறிந்த இயேசு அந்த மணல் திட்டுகள் மீது நடந்துவந்தார் என்று போதிக்கின்றனர்; நம்மை தடுமாறச் செய்யும் இதுபோன்ற புதிய போதனைகளை ஒதுக்கிவிட்டு தொடர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டும்; ஆனால் அது இன்றும் சுமார் 150 அடி ஆழமுள்ள "பேசின்"வடிவான நீர் நிலையாகவே இருக்கிறது;

ஆண்டவரை விசுவாசிப்பதால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதற்கு இஸ்ரவேலருடைய வனாந்தர பயணத்தில் நிகழ்ந்ததொரு காரியம் நல்ல சான்றாகும்;ஆண்டவர் மீது அதிருப்தி கொண்டு முறுமுறுத்த இஸ்ரவேலரை தண்டிக்க தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார்;மோசே ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது ஜனங்கள் பிழைக்க வெண்கல சர்ப்பத்தை செய்து வனாந்தரத்தில் உயர்த்தி வைக்கச் சொன்னார்;அதை நோக்கிப் பார்த்தவரெல்லாம் பிழைத்தனர்;அதாவது கடிபட்ட பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்காமல் தீர்வை நோக்கி பார்க்கவேண்டும் என்பதே ஆண்டவருடைய திட்டமாகும்;இதுபோல தற்கால போராட்டங்களை மேற்கொள்ள நமக்காக சிலுவையில் பலியான இயேசுவை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கவேண்டும்;

மரத் தொட்டியில் பிறந்த இயேசு மரச் சிலுவையில் நமக்காக அனைத்தையும் செய்து முடித்தார்;

வேதத்தின் முழு சாராம்சத்தினையும் சில வரிகளில் சொல்லக்கூடிய "குட்டி வேதாகமம்" என்ன சொல்கிறது,"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."(யோவான்.3:16) இதனை நம்பி விசுவாசிப்பதே நாம் நித்திய ஜீவனை அடைய உதவும்.

4.நற்கிரியைகளைச் செய்தல்

"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."(எபேசியர்.2:10)

நற்கிரியைகளைச் செய்வதே நாம் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கமானால் அதன்மூலம் நித்திய ஜீவனைப் பெறுவோம் என்பது அதிக நிச்சயமாம்;

"சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்."(ரோமர்.2:7)

மன உறுதியுடன் நற்காரியங்களைச் செய்யவேண்டும் என புதிய மொழிபெயர்ப்பில் வாசிக்கிறோம்;

நாம் செய்யக்கூடிய நற்கிரியைகளில் முதன்மையானது சுவிசேஷம் அறிவித்தலே;

மேலும்,"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்."(கலாத்தியர்.6:9) என்று பவுலடிகள் உறுதியளிக்கிறார்;

"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்."(யாக்கோபு.1:22)என்றும் "கிரியையில்லாத விசுவாசம் செத்தது" என்றும் யாக்கோபு கூறுகிறார்;

நியூயார்க் நகரத்தில் 63 ஒரு வயதான ஒருவர் மரித்துப்போனார்; அவர் ஒரு பிரபலமான ஆளல்ல; ஆனாலும் நகரத்திலுள்ள அத்தனை செய்தியாளர்களும் மக்களுமாக அங்கே குவிந்துவிட்டனர்; 

காரணமென்ன? அவர் பெரிய படிப்பாளி; அவருடைய பட்டங்களை அவருடைய பெயருக்குப் பின்னால் எழுதினால் அது மூன்று முறை A to Z எழுதியது போலிருக்கும்; அவ்வளவு படித்திருந்தும் அவர் எந்த வேலைக்கும் போகவில்லை;

காரணம் என்ன தெரியுமா? அவருடைய மாமா ஒருவர் அவருக்கு சொத்து எதையும் எழுதி வைக்காமல் 'அவர் படிக்க மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளலாம்' என்று உயில் எழுதி வைத்து இறந்ததுதான்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளவே இவ்வளவு படித்தாராம்;

அவ்வளவு படித்தும் என்ன பயன்? அவர் கட்டிட பொறியாளருக்கு படித்திருந்தாலும் எந்த கட்டிடத்தையும் கட்டவில்லை; மருத்துவம் படித்திருந்தார், ஆனாலும் யாருக்கும் வைத்தியம் செய்து உதவவில்லை; இன்னும் பல நல்ல படிப்புகளைப் படித்திருந்தும் அதற்கேற்ற எந்த வேலையும் செய்யவில்லை; அவரால் யாருக்கும் பயனில்லாமல் போனது;

இதுபோலவே ஆண்டவரை அறிந்தும் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டும் செயல்படாதோரால் ஆண்டவருக்கு எந்த பயனும் இராது; நாம் செய்யும் நற்கிரியைகளோ நித்திய ஜீவனுக்கு நம்மை நடத்தும்.

5.விட்டுவிடுதல்

இது மிகவும் சிரமமான காரியமாகத் தோன்றும்;ஆனாலும் இதுவே நித்திய ஜீவனுக்கு நம்மை தகுதிப்படுத்தும்;

பேதுரு,"இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மாற்கு.10:28 30)

ஆம் ஆண்டவரைப் பின்பற்றும்போது நூறத்தனையாக இங்கும் மறுமையில் அதற்கு அதிகமாகவும் தருவாராம்;

ஐசுவரியமும் பண ஆசையும் நித்திய ஜீவனுக்குத் தடையாகும் எனில் இதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுதல் நித்திய ஜீவனுக்கு ஆதாரமாகும்;வெறுத்துவிடுதலும் விட்டுவிடுதலுமே மனுக்குலத்தின் சவால் மிகுந்த சோதனையாகும்;முதலிடத்தில் தேவ காரியங்களையும் உலகத்தை அடுத்ததாகவும் வைத்துப் பார்த்தாலே அதன் அருமை புரியும்;

எளிமையான தொடரும் விசுவாசம் எந்த சூழ்நிலையையும் மேற்கொள்ள உதவும்; ஆண்டவரை நம்பாத ஒரு ஆசிரியர்; அவருடைய மாணவியோ ஆண்டவர் மீது மாறாத விசுவாசமுடையவள்; அந்த ஆசிரியர் எப்போது பார்த்தாலும் அந்த‌ மாணவியை பரியாசம் பண்ணும் வண்ணமாக எதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்;

ஒரு நாள் இப்படியே, "அந்த யோனா கதையை எப்படித தான் நம்புகிறீர்களோ, ஒரு மனுஷன் மீன் வயிற்றில் எப்படி 3 நாட்கள் இருக்கமுடியும்" என்றாராம்; அந்த மாணவி சொன்னாள்,"நான் எனது வேதத்தை முழுமையாக நம்புகிறேன், அது பொய் சொல்லாது, அப்படியே எதாவது சந்தேகமிருந்தாலும் நான் பரலோகத்துக்குச் செல்லும் போது யோனாவைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுவேன்" என்றாள்; அவரும் விடாமல் "ஒருவேளை யோனா நரகத்திலிருந்தால் என்ன செய்வாய்" என்றார்; மாணவி சற்றும் தாமதிக்காமல் சொன்னாள், "நீங்களே கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாமே" என்று.

"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்."(1.Jo 5:11,12)


இதுவே நமது விசுவாசத்தின் இறுதி அறிக்கையாக இருக்கட்டும்;இந்த விசுவாசத்தினால் நமக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே உண்டாயிருக்கும்.

Tuesday, December 22, 2009

சுதா என்றொரு பெண்


இன்று காலையில் சுதாவின் போன்..!
கடந்த ஒரு வருடமாகக் காத்திருக்கும் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை அமையவில்லை; இதனால் சோர்ந்துபோன வீட்டார் “நீ சாமி தோஷத்திலிருக்கிறாய், மேல்மருத்தூருக்கு மாலை போட்டு, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வந்தால் தான் நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்;





(தொடர்ந்து வாசிக்க...)

Friday, December 18, 2009

புதுவருட "வாக்குத்தத்தங்கள்" எச்சரிக்கை..!

உலக வழக்கில் சொல்கிறேன், இறைவனைப் பழிப்பவன் வாயில் "மண்ணைப் போடு" என்றானாம், ஒரு பக்தன்;அவனை விட தீவிர பக்தன் சொன்னானாம், "அந்த மண்ணும் பக்தர்களின் பதம் பட்டு புனிதமாக இருக்கும்; அதை அவன் வாயில் போடுவதால் புனிதமடைந்து அந்த பாவி கடைத்தேறிவிடுவான், அவன் நாக்கு புழுத்து போவதாக" என்று சபித்தானாம்;

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கெட்டவர்களுண்டு; அதனைக் கேட்டு விசுவாசித்தோர் கெட்டதாக வரலாறு இல்லை; புதிய விசுவாசிகளுக்கும் வளரும் விசுவாசிகளுக்கும் ஒரு கருப்பொருளுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வருட ஆரம்பத்தில் தருவதில் என்ன தவறு?

ஞானமான போதகர்கள் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களிலிருந்து தீர்க்கதரிசன செய்தியை தியானித்துப் போதித்து தங்கள் சபையினை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவர்;

மேலும் தன்னிடம் வரும் விசுவாசிக்கு கர்த்தருடைய பீடத்திலிருக்கும் ஊழியன் அவர் சார்பான வாக்கையும் எச்சரிப்பையும் தருவது அவனது கடமையாகும்; கற்பனையான சொந்த வாக்குகளைச் சொல்வதைவிட‌ ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குகளை நினைப்பூட்டுதலாகச் சொல்வது நன்மையே பயக்கும் என்பது எனது கருத்து.


To Be Contd...


Wednesday, December 16, 2009

Important Things from Ephesians 1


Important Things from Ephesians 1

He has blessed us (in Christ)
- with every spiritual blessing
- in the heavenly places

He chose us (in Christ)
- before the foundation of the world

He predestined us
- for adoption (through Jesus Christ)

We have redemption & forgiveness (in Christ)
- through His blood

He lavished the riches of His grace upon us
He made known to us the mystery of His will (set forth in Christ)
- a plan to unite all things

We have obtained an inheritance (in Christ)
We have been predestined
- to be those who hope in Christ to the praise of His glory

We were sealed with the promised Holy Spirit (in Christ)
- the guarantee of our inheritance
- to the praise of His glory



எனது டைரிக் குறிப்பு:-

எனது டைரிக் குறிப்பு:  


இன்று காலை துர்காவை சந்தித்தேன்; அவள் கடந்த சில மாதத்துக்கு முன்பு தனக்காக‌ பிரார்த்தனைக்காக செய்ய என்னைத் தொடர்பு கொண்டாள்;அது ஒரு சுவாரசியமான நிகழ்வு;அதனைக் குறித்து நிறைய எழுதவேண்டும்; இன்று அவள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நான் உள்ளூற தடுமாறினாலும் தடம் மாறாமல் அளித்த பதில் திருப்திகரமாக இருந்தது;  


அவள் கேட்ட கேள்வி,ஏன் கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள்?  


இது வழக்கமாக அனைத்து மார்க்கத்தவரும் கேட்கும் கேள்விதான்;அவர்கள் மார்க்கத்தில் எத்தனையோ பிரிவுகளிருப்பினும் கிறிஸ்தவ மார்க்கம் (மட்டுவாவது..?) பிரிவுகள் இல்லாததாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்;  


முதலில் பொதுவானதொரு பதிலைச் சொன்னேன்; இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்;இதில் எது சரி என்று எளிதாகச் சொல்லமுடியாது;ஏனெனில் ஒவ்வொன்றும் நம்பிக்கை சார்ந்த காரியம்;  


ஆனாலும் வேதம் இதற்கு தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது;வேதம் கடவுளின் தன்மையையும் அவரை அடையும் வகையையும் சொல்லித் தருகிறது;வேதம் என்பது பயின்று நிறைவேற்ற வேண்டியதாகும்; ஆனால் கடவுள் என்றதுமே தொழுகையே முதலிடம் பிடிக்கிறது;காரணம் வாழ்க்கையின் தேவைகள்;தொழுகை அவசியமானாலும் அதுவே போதுமானதல்ல;  


இதைக் குறித்த தெளிவு இல்லாததால் மனிதன் இரண்டு தவறு செய்தான்; ஒன்று, கடவுளை சிருஷ்டிகளுக்கு இணை வைத்தான்; இதனால் அவரைத் தாழ்த்தினான்; இரண்டு, எல்லாவற்றுக்கும் அதிகாரியான மனிதன் தன்னை விட தாழ்ந்த சிருஷ்டிகளை- தனக்குப் பணியாளாகக் கடவுள் சிருஷ்டித்தவற்றைப் பணிந்துக் கொண்டதால் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டான்;  


இப்படி கடவுளையும் தாழ்த்தி தன்னையும் சிறுமைப்படுத்திக் கொண்டதால் கடவுளை அடையும் வாசல் அடைபட்டது;  


இதற்குக் காரணமாக அமைந்தது,மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுயாதீனம்;இந்த சுய ஆளுமையினை தன்னாட்சியினை கடவுளுக்கு எதிர் வல்லமையிடம் இழந்ததால் அடிமைத்தனமும் பயமும் பிரிவினையும் மரணமும் வந்தது;சாவாமையுள்ள மனிதன் வாழ்வியல் அச்சங்களால் பீடிக்கப்பட்டான்;  


அடுத்த சவால் மெய்ப்பொருளை அடைய வேண்டும்; மெய்ப்பொருளான பரம்பொருளை எளிதில் அடையும் வாசல் அடைபட்டதால் மாற்றுவழியினைத் தேடும் மனிதனுக்கு முன்பாக இரண்டு கேள்வி உண்டு;  
ஒன்று கடவுளின் தன்மை என்ன? இரண்டு அவரை அடையும் வழி என்ன? அதாவது கடவுளை எப்படி புரிந்துக் கொள்ளுவது என்பதும் அவரை எப்படி அடைவது என்பதும் ஆதார நோக்கமாக இருக்கிறது;  


ஏனெனில் கடவுள் மனிதனை சிருஷ்டித்ததால் அந்த பரம்பொருளைக் குறித்த தேடலும் ஏக்கமும் ஆராய்ச்சியும் இயல்பாகவே மனிதனிடம் நிறைந்திருக்கிறது;  


ஆனாலும் எதிரியினால் திரையிடப்பட்ட‌ பிரிவினையாகிய தோஷம் நீங்காமல் பரிசுத்தமான இறைவனை அறிய முடியாது;அதற்கு ஒரு பரிகாரம் செய்தாக வேண்டும்;அந்த பரிகாரத்தை மனிதன் சார்பாக யாராவது செய்யவேண்டும்;அதனைச் செய்பவர் பாவதோஷமில்லாதவராக இருக்கவேண்டும்;  


இந்த விதிமுறையின்படி அன்புள்ள இறைவனே ஒரு ஏற்பாட்டைச் செய்தார்;தம்முடைய திரு வார்த்தையையே மனுடாவதாரத்தில் இந்த உலகுக்கு அனுப்பினார்;அவர் மூலம் பாவ மன்னிப்பாகிய மீட்பை அவருடைய மாசில்லாத இரத்தத்தின் மூலம் உண்டு பண்ண அவர் தாமே கிருபாதார பலியானார்;
 
ஆம்,ஜீவாதிபதி ஜீவனைத் தந்து நம்மை மீட்டுக்கொண்டார்; அவரே ஜீவனுக்கு அதிபதியாதலால் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார்;அவர் வழியாக பரம்பொருளை அடையும் வழி புதுப்பிக்கப்பட்டது;  


இதோ "கிறிஸ்மஸ்" எனும் பண்டிகையினைக் கொண்டாடுகிறோம்; "கிறிஸ்மஸ்" சொல்லும் சேதி என்ன,நம்மை மீட்க இறைவன் அன்புடன் அனுப்பிய கிருபாதாரபலி அவதரித்த நாள்; "அவதரித்தல்" என்னும் சொல்லே "மேலிருந்து கீழாக" என்று அர்த்தமாம்;  


ஆம்,இயேசு என்னும் இறை மைந்தன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்து நாம் விண்ணகம் சேரும் வழி வகையினை ஏற்படுத்தினார்,என்பதே நற்செய்தி..!  


துர்காவுக்கு எனது பதிலால் பரம திருப்தி;அதிலும் மனதால் இறைவனுடன் ஒன்றித்து இருப்பதே தியான அனுபவம்,அதுவே அனைத்து வெற்றிகளுக்கு ஆதாரம் என்று நான் சொன்னது மிகவும் சந்தோஷமாம்;  


ஏனெனில் தனியாக நேரமெடுத்து பிரார்த்தனை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்;ஆலயத்துக்கும் செல்லமுடியாது;வீட்டிலும் பிரார்த்தனை செய்யமுடியாது;இந்த நிலையில் நான் கூறிய எளிமையான வழிமுறை துர்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


Tuesday, December 15, 2009

தலைகுனிவு


வெற்றிகரமான குடும்ப வாழ்வின் இரகசியம், சகோதரிகளே;

அதனடிப்படையில்...

Promise for the month of Dec' 09

“In that day, saith the LORD of hosts, will I take thee, O Zerubabel, my servant, the son of Shealtiel, saith the LORD, and the LORD, and will make thee as a signet: for I have chosen thee, saith the LORD of hosts.”   =>Haggai.2:23


Visit:http://chillsam.wordpress.com/2009/12/15/promise-for-the-month-of-dec09/

Tuesday, December 8, 2009

ஆசீர்வாதத்தின் திறவுகோல்

"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24) 


வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;  


எனக்கு அருமையான நண்பர்களே, நம்முடைய ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார், 


" தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது " (2.நாளாகமம்.16:9) என்று நாம் வாசிக்கிறவண்ணமாக இந்த வார்த்தையானது நமது உள்ளத்தை அசைக்குமானால் நமக்கும் ஆண்டவர் தரப்போகும் வெற்றிக்காகப் பொறுமையாகக் காத்திருப்போம்;


"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" என்று வாசித்தோம்; சரி, ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக வேதம் கூறுவது என்ன‌?  


"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." (ஏசாயா.51:2 )  


இங்கே நாம் வாசிக்கிறோம், ஆபிரகாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாலேயே தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது; ஆனால் அவனது சந்ததியாரோ தேவச் செயலை மறந்து சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து தேவனைக் கோபப்படுத்தினர்; எனவே அவர்களை சத்துருக்களின் கைக்கு ஒப்புக்கொடுத்தார்; ஆனாலும் அவர்களை வெறுத்துவிடாமல் தீர்க்கர்களின் மூலம் அவர்களை உணர்த்தி நல்(தம்)வழிப்படுத்தவும் விரும்புகிறார்; இதுவே ஒரு தகப்பனின் இருதயமாகும்;  


கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது எனில் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்கக் காரணமாக இருந்தவற்றில் அவனுடைய பங்கு என்ன என்பதையும் தியானிப்போமாக‌.  


ஏனெனில் தேசத்தை சுதந்தரிப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வார்த்தையின்படி நிலங்களையும் பொன் பொருள்களையும் சொந்தமாக்கிக் கொள்வது மட்டுமல்ல; நமக்கு சுதந்தரமான கிறிஸ்துவை இந்தியர் அனைவருக்கும் சுதந்தரமாக்குவதே மெய்யான சுதந்தரமாகும்;  


எனவே இந்த சுதந்தர உணர்வு சாதித்த உணர்வாக ருசிக்கப்பட வேண்டுமானால் ஆபிரகாமின் வெற்றியிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்;ஆபிரகாமின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்ன என்று தியானிப்போமா?  


1. விசுவாசம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்தது,அவனிடம் காணப்பட்ட விசுவாசமே என்றால் அது மிகையல்ல;எனவே வேதம் சொல்லுகிறது,

"அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்." (கலாத்தியர்.3:9)

விசுவாசம் சோதனையில்லாமல் பூரணப்படாது வேதத்தின் விதியாகும்; நம்மைக் காக்கும் விசுவாசத்தை நாம் காத்துக்கொள்ளவேண்டும்; ஆபிரகாமின் உச்சக்கட்ட விசுவாசத்தை எங்கே காண்கிறோம்; அது அவன் தனது சேஷ்டபுத்திரனும் ஏக சுதனுமாகிய பலியாக ஒப்புக்கொடுத்த இடத்திலே வெளிப்பட்டது; 


தனக்கு ஒரு பிள்ளையைத் தருவதாக வாக்களித்த தேவன் அதையும் அவனது முதிர்வயதில் கொடுத்தபோது அவன் அடைந்த சந்தோஷத்தை முற்றிலும் மாற்றிப்போடும் வகையில் அந்த பிள்ளையையே பலியாக ஆண்டவர் கேட்பாரானால் எவ்வளவு இக்கட்டான நிலை? ஆனாலும் அந்த சூழ்நிலையை மேற்கொள்ள அவனால் முடிந்தது;


தன் பிள்ளையை வெட்ட அவன் தனது கையை ஓங்கியபோது அவனது மனம் எப்படி துடித்திருக்கும்? ஏனெனில் இராஜாவான சாலமோனுடைய நாட்களில் அவனிடம் ஒரு விசித்திர வழக்கு வந்தது; இரு தாய்மார் ஒரு பிள்ளைக்கு சொந்தங்கொண்டாடினார்கள்; சாலமோனோ உண்மையான தாயைக் கண்டுபிடிக்க வேண்டி ஒரு காரியம் சொன்னான், அந்த குழந்தையை இரண்டாகப் பிளந்து இரு தாய்மாருக்கும் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிடச் சொன்னான்; வேதம் சொல்லுகிறது,  


"அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; " (1.இராஜாக்கள்.3:26 )  


ஆம், தன் பிள்ளையை இரண்டாக வெட்டப்போவதையறிந்ததும் அந்த உண்மையான தாயின் குடல் துடித்ததாம்; அது போலவே ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட கையை உயர்த்திய போது அவனது இருத‌யம் துடித்திருக்கும்; ஆனாலும் ஆண்டவர் மீதான‌ தனது விசுவாசத்தை நிரூபிப்பதிலேயே அவன் கவனம் முழுவதும் இருந்தது; அதனாலேயே ஆபிரகாம் நீதிமான் என்று எண்ணப்பட்டான்; தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்.  


2.வாக்குத்தத்தம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இரண்டாவது காரியம், ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாக நம்பியது; வேதம் சொல்லுகிறது,  


"மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்."(எபிரெயர்.11:17,18,19)  


எந்த சூழ்நிலையிலிருந்து ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான்? வேதம் சொல்லுகிறது,  


"இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப்பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்." (அப்போஸ்தலர்.7:5)


நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் காத்திருப்பதற்கும் ஏதுவில்லாதிருந்த சூழ்நிலையிலேயே ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான் என்றும் வேதம் சொல்லுகிறது; ஒரு அடி நிலமும் இல்லாத நிலையில் தேசத்தையே சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று ஆண்டவர் சொன்னதை நம்பினான்;  


எனக்கு அருமையான நண்பர்களே இன்றைக்கு நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஒரு அடி நிலமும் ஒரு காசும் இல்லாத நிலையில் இந்த வாக்கு உங்களை நோக்கி வருகிறது;என் தேவன் எனக்கு இதுபோல செய்ய வல்லவர் என்று நம்புவீர்களா? அவருக்காகக் காத்திருப்பீர்களா? ஆண்டவர் நிச்சயம் அற்புதம் செய்வார்;  


பவுலுடன் இரவெல்லாம் ஆண்டவர் பேசினார்,உற்சாகப்படுத்தினார்;ஆனால் காலையில் வந்த செய்தி என்ன? பவுலை கொலை செய்யாமல் உண்பதில்லை என்று யூதர்கள் சபதம் எடுத்திருந்தனர்;பவுலோ சிறிதும் கலங்கவில்லை;நாம் வாக்குத்தத்த‌த்தைப் பெற்று உற்சாகத்துடனிருக்கும் நேரமே நம்மை சஞ்சலப்படுத்தும் செய்திகள் வரும்;ஆனாலும் முன்னேறியே செல்லவேண்டும்;  


ஒரு சில சூழ்நிலைகளில் எல்லோரும் கைவிட்ட நிலையில் ஆண்டவரே தேற்றுகிறார்;யாக்கோபுடைய வாழ்க்கையில் தகப்பனால் வெறுக்கப்பட்டும் சகோதரனால் துரத்தப்பட்டும் தாயாரும் அனுப்பிவிட்ட நம்பிக்கையற்ற இரவில் வனாந்தரத்தில் தேவன் அவனை சந்தித்தார்,"நான் உன்னோடிருப்பேன்" என வாக்கு கொடுத்தார்; ஆபிரகாமும் கூட இவ்வாறே வாக்குத்தத்தங்களை விடாமல் பற்றிக் கொண்டதாலேயே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்;  


3.தொழுகை

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த மூன்றாவது காரியம்,அவன் தேவனைத் தொழுதுகொள்ளுபவனாக இருந்ததாகும்;வேதம் சொல்லுகிறது,  


"ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்." ( ஆதியாகமம்.21:33 )  


ஆம்.தொழுதுகொள்ளுதல் என்பது விசுவாசத்தின் ஆதாரக் கிரியையாகும்;அது அனைத்து சம்பவங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது;ஏதோ ஒன்றை செய்தலல்ல;ஆண்டவரை ஆராதிப்பது என்பது ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையின் உரிமையாகும்;அதுவே தேவனுடனுள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் கிரியையாகும்; தொழுகை என்பது என்ன? வேதம் சொல்லுகிறது,

" நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்."(சங்கீதம்.116:17)

ஆம்,தொழுகை என்பதில் முக்கிய பங்கு வகிப்பது "ஸ்தோத்திர பலி" செலுத்துவதே; தற்காலத்தில் 1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது வழக்கமாக இருக்கிறது; அதில் 1000 ஸ்தோத்திர பலிகள் சொல்லி முடித்தபிறகு சொன்னவரின் மனநிலை எப்படியிருக்கும்?அதுபோன்ற திருப்தியுணர்வுக்காக அல்ல,உள்ளத்தில் ஆனந்தம் வந்தமரும் வரை துதிப்பதே சிறப்பானதாகும்; 


வழக்கமாக இயல்பாக ஸ்தோத்திரம் செலுத்துவதைத் தவிர சிறப்பாக ஸ்தோத்திர பலியைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் என்று சொல்லும் போது ஒரு விசேஷித்த பெலன் பெருகுவதை அனுபவிக்கமுடியும்; இதனால் பிசாசின் கட்டுகளுக்கு எதிராக ஒரு விசேஷித்த வல்லமை இறங்குவதையும் உணரமுடியும்;  


4.ஜெபம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த நான்காவது காரியம், அவனுடைய ஜெப வாழ்க்கையாகும்; ஜெபத்தின் மேன்மையைக் குறித்த வேதத்தின் போதனைகளைக் குறித்து அதிகமாகவே அறிந்திருக்கிறோம்;வேதம் சொல்லுகிறது,  


"ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்." (ஆதியாகமம்.20:18)  


ஆபிரகாமின் ஜெப வாழ்க்கையைக் குறித்து நாம் அறிந்திருக்கக்கூடிய காரியங்களில் இது மிகவும் வித்தியாசமானதாகும்; அதாவது தன‌க்கு தீங்கு செய்த அரசக் குடும்பத்துக்காக வேண்டுதல் செய்கிறான்; கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபிக்கும் போது அதைக் கேட்பதற்கு ஆண்டவர் ஆவலாக இருக்கிறார்; 


இயேசுவானவர் இந்த பூமியில் வாழ்ந்தபோது அவருடைய ஜெபத்தால் வானம் திறந்ததாக வேதம் சொல்லுகிறது; ஆம்,நாமும் வேண்டிக்கொள்ளும்போது வானம் திறக்கிறது; ஜெபம் என்னும் போது யாபேஸைக் குறித்து நிச்சயம் தியானிப்போம்;யாபேஸின் ஜெபத்தில் ஒரு கவனிக்கத் தகுந்த காரியம், வேதம் சொல்லுகிறது,  


"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்."(1.நாளாகமம். 4:10 )  


இந்த வேத வசனத்தில் யாபேஸைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு காரியம்,மீண்டும் மீண்டும் வரும் 'என்னை','என்' போன்ற வார்த்தைகள்; இது ஐந்து முறை வருகிறது; இது சுயநலம் போலத் தோன்றுகிறதல்லவா? ஆனாலும் வேதம் சொல்லுகிறது,  


"நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு." (எசேக்கியேல்.38:7 )  


ஆம்,தேவனுடைய பிள்ளைகளின் வழியாகவே நம்மைச் சார்ந்த சமூகம் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்பது தேவ சித்தமாகும்;அப்படியானால் நாமே நம்முடைய ஆசீர்வாதத்துக்காக வேண்டுதல் செய்ய
வேண்டியவர்களாக இருக்கிறோம்; அதனை அப்படியே அருளிச் செய்ய தேவன் ஆயத்தமாகவே இருக்கிறார்;  


கடந்த வருடத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்த சகோதரன் DGS.தினகரன் அவர்கள் தனது கடைசி புது வருட செய்தியில் இந்த யாபேஸின் ஜெபத்தையே போதித்து மக்களைனைவரையும் சொல்லவும் செய்தார்;மாத்திரமல்ல, 'இந்த ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லுங்கள், இந்த ஜெபம் உங்கள் தலையெழுத்தையே மாற்றிவிடும்' என்றாராம்; வேதம் சொல்லுகிறது, காலேபின் மகள் தன் தகப்பனை நோக்கி, "...எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.


ஆம்,நம்முடைய சூழ்நிலை கர்த்தர் அனுமதித்த காரியங்கள் கடினமானதாக இருப்பினும் ஆண்டவரை நோக்கி தாழ்மையுடன் வேண்டிக்கொண்டால் காரியத்தை சாதகமாக மாற்றுவார்; வறட்சியும் செழிப்பாகும்.  


5.பிரஸ்தாபித்தல்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இறுதியான ஐந்தாவது காரியம்,அவன் கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபிக்கிறவனாக இருந்தான்;வேதம் சொல்லுகிறது,  


"நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." (ஆதியாகமம்.20:24)  


ஆபிரகாமும் கூட இவ்வாறே ஆண்டவருக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு கர்த்தருடைய நாமத்தைக் குறித்த தனது அனுபவத்துடன் கூடியதொரு பெயரை வைக்கிறான்; தனது மகனைத் தான் பலியாகக் கொடுக்காமல் மீட்டுக்கொள்ளவும் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியுடன் திரும்பிச் செல்லவும் உதவி செய்த தேவனுக்கு "யெகோவா யீரே" எனப் பெய‌ரிட்டு கர்த்தர் தம்முடைய தேவைகளையெல்லாம் சந்திக்க வல்லவர் என்று அறிக்கை செய்தான்;  


"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவா-யீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது." 
(ஆதியாகமம்.22:14 )  


ஆம், கடைசி நிமிடத்தில் கூட இடைபட்டு ஆண்டவர் தமது வல்லமையினை விளங்கப்பண்ணி நம்மை சந்தோஷப்படுத்துவார்; மாத்திரமல்ல, நன்மையாகவும் முடியப்பண்ணுவார்; யோசேப்பைக் குறித்து வேதம் சொல்லுகிறது,  


"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." (ஆதியாகமம்.50:20 )  


ஆம், நண்பர்களே நம்முடைய சூழ்நிலை எதுவாக இருப்பினும் நாம் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபிக்கும்போது அவரும் நம்மை உயர்த்துவார் என்பது நிச்சயம்.