praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, March 31, 2010

கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனம்..? - Yauwana Janam

இராப்போஜனம்..? - Yauwana Janam

கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் காலங்களில் இருக்கிறோம்;

இந்த நேரத்தில் அபஸ்வரம் போல சிலருடைய துருபதேசங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது சுயாதீனத்தை ஐயத்துக்குள்ளாக்குவதைப் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது;

இது வழக்கம்போல வருடாவருடம் நாம் சந்திக்கும் சர்ச்சைதான்; இதற்கு இதுவரை கண்டுக்கொள்ளாமல் கடந்துப்போகும் வழிமுறையினையே கடைபிடித்துவருகிறோம்;

ஆனாலும் இதற்கு சரியானதொரு பதில் இருக்குமல்லவா? அதனை தெரிவித்தால் அநேக அப்பாவி ஆத்துமாக்கள் சூதான போதகங்களால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கலாமே!

கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனமே முதலாவது சர்ச்சை; அது மிகவும் முக்கியமானதாக கட்டளையாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது;

அது அத்தனை முக்கியமானதாக இருந்தால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு நேரத்திலும் காலத்திலும் முறையிலும் அதனை ஆசரிப்பது ஏன்?
இதைக் குறித்த எனது பொதுவான அபிப்ராயத்தினை எனது தளத்தில் பதித்துள்ளேன்;அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எழும்பக்கூடிய கருத்துக்களை தளநண்பர்கள் பகிர்ந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..!



No comments:

Post a Comment